கோவை சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது!

கோவையில் பள்ளி சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி, பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை, மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை அருகே பள்ளிச்சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு 2021 ஆம் ஆண்டு திருவிழா ஒன்றில் கார்த்திகேயன் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமியை காதலிப்பதாக கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற கார்த்திகேயன் திருமணம் செய்து கொள்வதாக கூறிய இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்றபொழுது சிறுமி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் கார்த்திகேயனை, போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...