கோவை சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது!

கோவையில் பள்ளி சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி, பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை, மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை அருகே பள்ளிச்சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு 2021 ஆம் ஆண்டு திருவிழா ஒன்றில் கார்த்திகேயன் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமியை காதலிப்பதாக கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற கார்த்திகேயன் திருமணம் செய்து கொள்வதாக கூறிய இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்றபொழுது சிறுமி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் கார்த்திகேயனை, போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...