கோவை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை - வாழை, தென்னை மரங்கள் சேதம்!

கோவை பன்னிமடை அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவை உணவு தேடி மலையடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன.



இந்த நிலையில், ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு நேற்றிரவு பன்னிமடையை அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள பிரபு துரைசாமி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்திலிருந்த வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளது.

இது குறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சேதங்கள் குறித்து சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...