கோவை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை - வாழை, தென்னை மரங்கள் சேதம்!

கோவை பன்னிமடை அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவை உணவு தேடி மலையடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன.



இந்த நிலையில், ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு நேற்றிரவு பன்னிமடையை அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள பிரபு துரைசாமி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்திலிருந்த வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளது.

இது குறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சேதங்கள் குறித்து சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...