கோவை அருகே குழந்தைகளை விரட்டிய நபரை தட்டிக்கேட்ட 4 பேருக்கு கத்திக்குத்து! - பரபரப்பு

கோவை போத்தனூர் பகுதியில் தெருவில் விளையாடிய குழந்தைகளை செங்கல்லை எடுத்துக்காட்டி விரட்டியடித்த நபரிடம், அதைத் தட்டிக்கேட்க வந்த 4 பேரை கத்தியால் குத்திய கோபாலகிருஷ்ணன் என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் அருகே குழந்தைகளை விரட்டியது ஏன் என தட்டிக்கேட்ட 4 பேரை கத்தியால் குத்திய தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போத்தனூர் பகுதியில் வசிப்பவர் கோபால கிருஷ்ணன். இவர் இரும்பு தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மேட்டூர், போத்தனூர் அருகே உள்ள அங்கமுத்து கவுண்டர் வீதியில் குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கோபாலகிருஷ்ணன், குழந்தைகள் இந்த தெருவில் விளையாடக் கூடாது என்று தெரிவித்து செங்கலை எடுத்து காட்டி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வசிக்கும் சிலர், குழந்தைகள் ஏன் விளையாட கூடாது? ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கோபாலகிருஷ்ணனை பார்த்து கேட்டிருக்கின்றனர். அப்போது கோபமடைந்த கோபாலகிருஷ்ணன் கேள்வி கேட்டவர்களை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், அவர் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரதீப் என்ற நபரை தாக்கியுள்ளார். இதைத் தடுக்க வந்த நபர்களையும் கோபாலகிருஷ்ணன் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் பிரதீப்பிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று செந்தில் என்பவருக்கு இடது வயிற்றுப் பகுதியிலும், கண்ணன் என்பவருக்கு இடது கை பகுதிகளும், செந்தில்குமாருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

கோபாலகிருஷ்ணன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த செந்தில்குமார் அரசு மருத்துவமனையிலும் மற்ற மூவரும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபால கிருஷ்ணனை கைது செய்து, கத்தியையும் பறிமுதல் செய்ததோடு, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...