கோவை அருகே குழந்தைகளை விரட்டிய நபரை தட்டிக்கேட்ட 4 பேருக்கு கத்திக்குத்து! - பரபரப்பு

கோவை போத்தனூர் பகுதியில் தெருவில் விளையாடிய குழந்தைகளை செங்கல்லை எடுத்துக்காட்டி விரட்டியடித்த நபரிடம், அதைத் தட்டிக்கேட்க வந்த 4 பேரை கத்தியால் குத்திய கோபாலகிருஷ்ணன் என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் அருகே குழந்தைகளை விரட்டியது ஏன் என தட்டிக்கேட்ட 4 பேரை கத்தியால் குத்திய தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போத்தனூர் பகுதியில் வசிப்பவர் கோபால கிருஷ்ணன். இவர் இரும்பு தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மேட்டூர், போத்தனூர் அருகே உள்ள அங்கமுத்து கவுண்டர் வீதியில் குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கோபாலகிருஷ்ணன், குழந்தைகள் இந்த தெருவில் விளையாடக் கூடாது என்று தெரிவித்து செங்கலை எடுத்து காட்டி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வசிக்கும் சிலர், குழந்தைகள் ஏன் விளையாட கூடாது? ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கோபாலகிருஷ்ணனை பார்த்து கேட்டிருக்கின்றனர். அப்போது கோபமடைந்த கோபாலகிருஷ்ணன் கேள்வி கேட்டவர்களை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், அவர் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரதீப் என்ற நபரை தாக்கியுள்ளார். இதைத் தடுக்க வந்த நபர்களையும் கோபாலகிருஷ்ணன் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் பிரதீப்பிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று செந்தில் என்பவருக்கு இடது வயிற்றுப் பகுதியிலும், கண்ணன் என்பவருக்கு இடது கை பகுதிகளும், செந்தில்குமாருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

கோபாலகிருஷ்ணன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த செந்தில்குமார் அரசு மருத்துவமனையிலும் மற்ற மூவரும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபால கிருஷ்ணனை கைது செய்து, கத்தியையும் பறிமுதல் செய்ததோடு, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...