பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரம் - விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், தற்போது சாட்சிகளிடம் சிபிஐ போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதால் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாட்சிகளிடம் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை கும்பல் ஒன்று, வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

அவ்வாறு நடந்த வன்கொடுமையில் கல்லூரி மாணவி ஒருவர், கதறிய ஓலம் இன்றும் நம் காதுகளில் இருந்து ஓய்ந்தபாடில்லை. இந்த வழக்கு பெரும் பூதாகரமாக வெடித்த நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட திருநாவுக்கரசு, மணிகண்டன், வசந்தகுமார், சபரி, அருளானந்தம் உள்ளிட்ட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பின்னாளில் சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை நகலையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

குறிப்பாக வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியதாக கூறப்படுகின்றது. வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடந்த நிலையில், வழக்கின் சாட்சியங்களை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அதாவது கோவையில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள், பெண் விசாரணை அதிகாரி தலைமையில் விசாரணை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு பொறுத்தவரையில் பெண்கள் சாட்சியங்களாக இருப்பதனால், பெண் அதிகாரி விசாரணையை கையில் எடுத்திருப்பதாகவும் தெரிகிறது. பரபரப்பு ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது சாட்சியங்களிடம் விசாரணை நடந்து வருவதனால் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...