பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரம் - விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், தற்போது சாட்சிகளிடம் சிபிஐ போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதால் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாட்சிகளிடம் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை கும்பல் ஒன்று, வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

அவ்வாறு நடந்த வன்கொடுமையில் கல்லூரி மாணவி ஒருவர், கதறிய ஓலம் இன்றும் நம் காதுகளில் இருந்து ஓய்ந்தபாடில்லை. இந்த வழக்கு பெரும் பூதாகரமாக வெடித்த நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட திருநாவுக்கரசு, மணிகண்டன், வசந்தகுமார், சபரி, அருளானந்தம் உள்ளிட்ட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பின்னாளில் சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை நகலையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

குறிப்பாக வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியதாக கூறப்படுகின்றது. வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடந்த நிலையில், வழக்கின் சாட்சியங்களை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அதாவது கோவையில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள், பெண் விசாரணை அதிகாரி தலைமையில் விசாரணை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு பொறுத்தவரையில் பெண்கள் சாட்சியங்களாக இருப்பதனால், பெண் அதிகாரி விசாரணையை கையில் எடுத்திருப்பதாகவும் தெரிகிறது. பரபரப்பு ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது சாட்சியங்களிடம் விசாரணை நடந்து வருவதனால் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...