கோவை மாவட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுக்ககோரி போராட்டம் அறிவிப்பு

கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சரின் கவனத்தை எடுத்துச் செல்வதற்காக, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.


கோவை: கனிமவள கொள்ளையைத் தடுக்ககோரி தமிழ்நாடு-கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தவுள்ளோம்.

குறிப்பாக இந்த கனிமவளக் கொள்ளையில் வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் முக்கிய பிரமுகர்களின் பெயர்களைக் கூறி, கல்குவாரி அதிபர்களிடம் வசூலில் ஈடுபட்டு வருகிறார். சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளால் விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிலங்கள் பாலைவனமாவது மட்டுமின்றி, நில அதிர்வுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி சட்ட விரோதமாகக் கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...