கோவை மாவட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுக்ககோரி போராட்டம் அறிவிப்பு

கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சரின் கவனத்தை எடுத்துச் செல்வதற்காக, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.


கோவை: கனிமவள கொள்ளையைத் தடுக்ககோரி தமிழ்நாடு-கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தவுள்ளோம்.

குறிப்பாக இந்த கனிமவளக் கொள்ளையில் வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் முக்கிய பிரமுகர்களின் பெயர்களைக் கூறி, கல்குவாரி அதிபர்களிடம் வசூலில் ஈடுபட்டு வருகிறார். சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளால் விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிலங்கள் பாலைவனமாவது மட்டுமின்றி, நில அதிர்வுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி சட்ட விரோதமாகக் கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...