கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு - எம்எல்ஏ தாமோதரன் பங்கேற்பு

கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு புடவை வழங்கி, வளையல் அணிவிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.



கோவை கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.

இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கிணத்துக்கடவு வட்டார திட்ட அலுவலர் சகுந்தலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னதாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் கர்ப்பிணிப் பெண்களுக்குப் புடவை வழங்கி, வளையல்கள் அணிவித்து ஐந்து வகையான அறுசுவை சாப்பாடுகள் வழங்கப்பட்டன. தாய் வீட்டில் நடப்பது போல் நடந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியைக் கண்டு கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபு, சுரேஷ் மற்றும் கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்தி சரண்யா, மஞ்சுளா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...