கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு - எம்எல்ஏ தாமோதரன் பங்கேற்பு

கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு புடவை வழங்கி, வளையல் அணிவிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.



கோவை கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.

இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கிணத்துக்கடவு வட்டார திட்ட அலுவலர் சகுந்தலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னதாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் கர்ப்பிணிப் பெண்களுக்குப் புடவை வழங்கி, வளையல்கள் அணிவித்து ஐந்து வகையான அறுசுவை சாப்பாடுகள் வழங்கப்பட்டன. தாய் வீட்டில் நடப்பது போல் நடந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியைக் கண்டு கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபு, சுரேஷ் மற்றும் கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்தி சரண்யா, மஞ்சுளா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...