கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு - எம்எல்ஏ தாமோதரன் பங்கேற்பு

கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு புடவை வழங்கி, வளையல் அணிவிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.



கோவை கிணத்துக்கடவு சமுதாயக் கூடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.

இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கிணத்துக்கடவு வட்டார திட்ட அலுவலர் சகுந்தலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னதாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் கர்ப்பிணிப் பெண்களுக்குப் புடவை வழங்கி, வளையல்கள் அணிவித்து ஐந்து வகையான அறுசுவை சாப்பாடுகள் வழங்கப்பட்டன. தாய் வீட்டில் நடப்பது போல் நடந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியைக் கண்டு கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபு, சுரேஷ் மற்றும் கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்தி சரண்யா, மஞ்சுளா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...