கோவையில் பிடிபட்டு 24 மணி நேரமாக லாரியில் சுற்றும் மக்னா யானை!

கோவையில் பிடிபட்ட மக்னா யானையை கடந்த 24மணி நேரமாக வனத்துறையினர் லாரியில் வைத்துச் சுற்றுவதால், அந்த யானை சோர்வுடன் காணப்படுகிறது. இறுதியாக மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடக் கொண்டு செல்லப்பட்ட போது, செய்தியாளர்களுக்கு வனப்பகுதியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: தருமபுரி மாவட்டம் வனப்பகுதியிலிருந்து வெளியேறி விளைநிலங்களைச் சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானையை கடந்த 5ஆம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட நிலையில் பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்ஸ்லிப் வரகளியாறு வனப்பகுதியில் 6ஆம் தேதியன்று விடப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டாப்ஸ்லிப் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்னா யானை சேத்துமடை, ஆத்து பொள்ளாச்சி, ராமபட்டினம், ஜலத்தூர் போன்ற பகுதிகளில் புகுந்து உலா வந்த நிலையில், இந்த யானை இடம் பெயர்ந்து கோவையை நோக்கி மதுக்கரையை கடந்து பேரூர் சென்றது.



இந்த யானை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கோவை மாநகர பகுதிகளில் சுற்றி திரிந்த நிலையில், யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு நேற்று யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் யானையைப் பிடித்தனர்.



இந்நிலையில் யானையை சத்தியமங்கலம் வனப்பகுதிக்குக் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டு லாரி மூலம் கொண்டு சென்ற போது, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யானையை மீண்டும் பொள்ளாச்சி-ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குக் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டு மீண்டும் யானையை பொள்ளாச்சி நோக்கி லாரியின் மூலம் கொண்டு வந்தனர்.



இந்த யானையை வால்பாறை-மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான மந்திரிமட்டம் என்னும் இடத்தில் விட வனத்துறையினர் திட்டமிட்டு, யானையை மானாம்பள்ளி வனச் சோதனை சாவடியை தாண்டி வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர்.



நேற்று கோவையில் பிடிபட்ட யானை 24 மணி நேரமாக, தொடர்ந்து லாரியில் பயணம் செய்ததால் களைப்படைந்த மக்னா யானை மானாம்பள்ளி சோதனை சாவடியை நெருங்கிய போது மயக்க நிலையில் காணப்பட்டது.



மேலும் யானை கொண்டு செல்லப்பட்ட வனப்பகுதிக்குள் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...