உடுமலை, மடத்துக்குளத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் - உருவப் படத்திற்கு மலர் மரியாதை!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



மத்திய பேருந்து நிலையம்முன் வாரச்சந்தை பகுதியில் அலங்கரிக்கபட்ட ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு நகரசெயலாளர் ஹக்கிம் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பழக்கடை கார்த்தி வழக்கறிஞர் கண்ணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வனிதா மணி, மளிகை செல்வம், அண்ணா தொழிற்சங்கம் துபாய் ஆறுமுகம், தொழிற்சங்கம் சந்தை வேலாயுதம், சரவணன் உடுமலை நகர அதிமுக நிர்வாகிகள் வாரச்சந்தை அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதேபோல், மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அறிவுறுத்தல்படி பேரூர் கழக செயலாளர் நிலம்பூர் செல்வராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மடத்துக்குளம் பேரூர் கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...