தாராபுரம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.8.5 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,155-ம் குறைந்தபட்சமாக ரூ.2,146 -ம் ஏலம் போனது.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கியம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை இந்தக் கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.



குறிப்பாக திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 40 ஆயிரம் கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.



அதற்கான மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிக பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,155-ம் குறைந்த பட்சமாக ரூ.2,146 -ம் ஏலம் போனது.

அதன் மூலம் மொத்தமாக ரூ.8 லட்சத்து 56 ஆயிரத்து 898-க்கு மக்காச்சோளம் விற்பனையானது. மக்காச் சோளம் ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்கு முறை கூடம் மேற்பார்வையாளர் அருள்குமார் செய்து இருந்தார்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...