தாராபுரம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.8.5 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,155-ம் குறைந்தபட்சமாக ரூ.2,146 -ம் ஏலம் போனது.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கியம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை இந்தக் கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.



குறிப்பாக திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 40 ஆயிரம் கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.



அதற்கான மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிக பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,155-ம் குறைந்த பட்சமாக ரூ.2,146 -ம் ஏலம் போனது.

அதன் மூலம் மொத்தமாக ரூ.8 லட்சத்து 56 ஆயிரத்து 898-க்கு மக்காச்சோளம் விற்பனையானது. மக்காச் சோளம் ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்கு முறை கூடம் மேற்பார்வையாளர் அருள்குமார் செய்து இருந்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...