கோவை அருகே சாலையில் கிடந்த பணம் - காவல்நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல்நிலையத்தில் நேர்மையாக ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களான சஷ்வந்த், தர்சன், பிரனவ் ஆகியோருக்கு காவல்துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சின்னதடாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொட்டக் கப்பள்ளி உள்ளது. கடந்த 15ந் தேதி மாலை பள்ளி நேரம் முடிந்து மாணவ - மாணவியர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் பணம் ரூபாய் 200 கிடந்துள்ளது.

இதை அவ்வழியாக வந்துகொண்டிருந்த மாணவர்கள் சஷ்வந்த்(வயது9) தர்சன் (வயது9) பிரனவ் மற்றும் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் கௌதம் ஆகியோர் பார்த்தனர். அந்தப் பணத்தை எடுத்து தடாகம் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.

சாலைலியல் கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களின் நேர்மையைப் பாராட்டும் விதமாக நேற்று அவர்களை காவல் நிலையத்திற்குவரவழைத்து சப்இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...