கோவை அருகே சாலையில் கிடந்த பணம் - காவல்நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல்நிலையத்தில் நேர்மையாக ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களான சஷ்வந்த், தர்சன், பிரனவ் ஆகியோருக்கு காவல்துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சின்னதடாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொட்டக் கப்பள்ளி உள்ளது. கடந்த 15ந் தேதி மாலை பள்ளி நேரம் முடிந்து மாணவ - மாணவியர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் பணம் ரூபாய் 200 கிடந்துள்ளது.

இதை அவ்வழியாக வந்துகொண்டிருந்த மாணவர்கள் சஷ்வந்த்(வயது9) தர்சன் (வயது9) பிரனவ் மற்றும் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் கௌதம் ஆகியோர் பார்த்தனர். அந்தப் பணத்தை எடுத்து தடாகம் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.

சாலைலியல் கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களின் நேர்மையைப் பாராட்டும் விதமாக நேற்று அவர்களை காவல் நிலையத்திற்குவரவழைத்து சப்இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...