கோவை அருகே சாலையில் கிடந்த பணம் - காவல்நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல்நிலையத்தில் நேர்மையாக ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களான சஷ்வந்த், தர்சன், பிரனவ் ஆகியோருக்கு காவல்துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சின்னதடாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொட்டக் கப்பள்ளி உள்ளது. கடந்த 15ந் தேதி மாலை பள்ளி நேரம் முடிந்து மாணவ - மாணவியர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் பணம் ரூபாய் 200 கிடந்துள்ளது.

இதை அவ்வழியாக வந்துகொண்டிருந்த மாணவர்கள் சஷ்வந்த்(வயது9) தர்சன் (வயது9) பிரனவ் மற்றும் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் கௌதம் ஆகியோர் பார்த்தனர். அந்தப் பணத்தை எடுத்து தடாகம் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.

சாலைலியல் கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களின் நேர்மையைப் பாராட்டும் விதமாக நேற்று அவர்களை காவல் நிலையத்திற்குவரவழைத்து சப்இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினர்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...