கோவையில் பழமையான விநாயகர் கோயில் சுவர் இடிப்பு - இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு

கோவை பூ மார்க்கெட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு இருந்த விநாயகர் கோவில் சுவரை மாநகராட்சி ஊழியர்கள் இடித்த நிலையில், இதையறிந்த இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர், அங்கு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இடித்த சுவரை கட்டித்தர கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை பூ மார்க்கெட் அருகே பழமையான விநாயகர் கோவில் சுவரை இடித்த மாநகராட்சி அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை பூ மார்க்கெட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு பழமை வாய்ந்த விநாயகர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் கோவிலின் சுற்று சுவரை இடித்ததாக கூறப்படுகிறது.



இதனை கேள்விப்பட்ட இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் இடிக்கப்பட்ட கோவில் சுவரை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அந்த கோவில் அரச மரத்திற்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து, இந்து அமைப்பினர் வழிபாடு நடத்தினர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினரால் அந்த கோவில் இடிக்கப்பட்ட போது, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...