கோவை கிராமங்களில் புகுந்த மக்னா யானை - மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கத் திட்டம்?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியிலிருந்து வெளியேறி, குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் மக்னா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி 2வது நாளாக நீடிக்கிறது.



கோவை: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்சீட் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னாயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி நேற்று கோவை மாவட்டம் மதுக்கரை பகுதிக்கு வந்தது.

ஊருக்குள் புகுந்த யானை ஒரு வீட்டில் சுற்றுப்புற சுவரை இடித்து தள்ளியது மேலும் ஒரு வனத்துறை வாகனத்தையும் சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்து பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்த யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நேற்றிலிருந்து வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் பகுதி நோக்கி வந்த யானையை 75க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி தொடர்கிறது.



மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் பகுதிக்கு வந்த யானை, புட்டு விக்கி பாலம், நொய்யல் ஆற்று பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது.



குடியிருப்பு பகுதியில் இருந்து சற்று விலகி இருக்கும் மக்னா யானை, குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்றைய தினம் யானை இருக்கும் பகுதிக்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ், பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கு கோவை மாநகர காவல் துறையினர் பணியில் ஈடுபடுவர் என தெரிவித்திருந்ததையடுத்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினரும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் பணியில் மாநகர காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதிக்குள் யானையை விரட்ட முடியாதபட்சத்தில், தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தி மக்னாவை பிடிக்கவும் வனத்துறையினர் திட்டுமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...