கூடலூர் அருகே வலம் வரும் மக்னா யானை - வனத்திற்குள் விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு!

கூடலூர் அருகே பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும், மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.



நீலகிரி: கூடலூர் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை விரட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் உணவு தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட தேன் வயல், குளில் வயல், போஸ்பாரா போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்னா யானை ஊருக்குள் வந்து, பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.



குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் குழுக்களாகப் பிரிந்து இரவு, பகலாக அந்த ஒற்றை மக்னா யானையை கண்காணித்து வந்த நிலையில், அந்த யானையை விரட்ட முதுமலை யானைகள் முகாமிலிருந்து கணேசன் மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...