கோவையில் கலவரத்தை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் ஒத்திகை நிகழ்ச்சி!

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில்,நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், ட்ரோனை கட்டுப்படுத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போன்றவை செய்து காண்பிக்கப்பட்டன.


கோவை: கலவரத்தை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி, கோவை மாநகர காவல் துறை, பிஎஸ்ஜி கல்லூரி ரோபோடிக் துறையுடன் இணைந்து கலவர நேரங்களில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்தது.



அதன்படி ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் ஒத்திகை, காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் ட்ரோனை எவ்வாறு கையாள்வது, குறிப்பிட்ட இடத்தில் கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு வீசுவது போன்றவை செய்து காண்பிக்கப்பட்டன.



அதே சமயம் கலவரம் நிகழ்வது போன்றும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிப்பது போன்றும் கலவர இடத்தில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்துவது போன்றும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிஎஸ்ஜி கல்லூரி ரோபோடிக் மாணவர்கள், பேராசிரியர்கள், கோவை மாநகர ஆயுதப்படை காவல் துணை ஆணையர் முரளிதரன், காவல் உதவி ஆணையர் சேகர் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் உட்பட மாநகர காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...