கோவையில் மருத்துவ மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியீடு - பெண் ஐ.டி ஊழியர் உட்பட இருவர் கைது!

கோவை வீரபாண்டி அருகே உறவுக்கார பெண்ணான மருத்துவ மாணவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட பெண் ஐ.டி. ஊழியர் கௌசல்யா, நண்பர் பாலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவை வீரபாண்டி அருகே மருத்துவ மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த பெண் ஐ.டி. ஊழியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா என்றஐ.டி துறையில் பணியாற்றி வருகிறார். இவரது உறவுக்கார பெண் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உறவுக்கார பெண்ணை பழிவாங்கஐ.டி ஊழியர் கௌசல்யா திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, உறவுக்கார பெண்ணின் நண்பரான தொண்டாமுத்தரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

பாலகிருஷ்ணன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை எடுத்து கௌசல்யாவிற்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை பெற்றுக் கொண்ட கௌசல்யா அதனை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த ஆபாச புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உறவினர்களுடன் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐ.டி.ஊழியர் கௌசல்யா மற்றும் உறவுக்கார பெண்ணின் நண்பர் பாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணின் படத்தை உறவுக்கார பெண்ணே தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...