மதுக்கரை அருகே முகாமிட்டுள்ள மக்னா யானை - 8 குழுக்கள் அமைத்து வனத்துறை தீவிர கண்காணிப்பு!

தருமபுரியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் மீண்டும் வெளியேறி, மதுக்கரை அருகே மோகன் நகரில் முகாமிட்டுள்ளது. அதனை வனத்துறை 8 குழுக்களை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே முகாமிட்டுள்ள மக்னா யானையை வனத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்கு புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

இந்நிலையில் சின்ன தம்பி என்ற கும்கி யானையை வைத்து வனக்குழுவினர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அந்த மக்னா யானையை பிடித்தனர். பிடிபட்ட யானை டாப்சிலிப் அருகே உள்ள வரகளியார் வனப்பகுதியில் 6ஆம் தேதி விடப்பட்டது.

இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் தனிக்குழு அமைத்து அந்த மக்னா காட்டு யானையை கண்காணித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த யானை வனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.



இதனிடையே சேத்துமடை கிராமம் வழியாக நுழைந்த யானை, நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, மன்னூர் ராமநாதபுரம் பகுதியை கடந்து மதுக்கரை சாலையை கடந்து மோகன் நகருக்குள் வந்து முகாமிட்டுள்ளது.



இந்நிலையில், அந்த யானையை வனத்துறையினர் 8 குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது, அந்த யானை ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த யானை குனியமுத்தூர், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள டிரம்களில் தண்ணீர் பருகியும் மர கிளைகளை உடைத்தும் குடியிருப்பு பகுதியில் உலா வந்து கொண்டிருக்கிறன. தர்மபுரி பகுதியில் பயிரை மேய்ந்து பழக்கபட்டதனால் வனத்தினை விட்டு வெளியேறி விளை நிலங்களில் உலா வருகின்றது.



யானையால் இதுவரை மனித முரண் ஏற்படவில்லை. ஆனாலும் பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



யானை தற்போது வெயில் காரணமாக ஓய்வெடுத்து வருவதாகவும், யானையின் நடமாட்டத்தை வனத்துறை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...