மதுக்கரை அருகே முகாமிட்டுள்ள மக்னா யானை - 8 குழுக்கள் அமைத்து வனத்துறை தீவிர கண்காணிப்பு!

தருமபுரியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் மீண்டும் வெளியேறி, மதுக்கரை அருகே மோகன் நகரில் முகாமிட்டுள்ளது. அதனை வனத்துறை 8 குழுக்களை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே முகாமிட்டுள்ள மக்னா யானையை வனத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்கு புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

இந்நிலையில் சின்ன தம்பி என்ற கும்கி யானையை வைத்து வனக்குழுவினர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அந்த மக்னா யானையை பிடித்தனர். பிடிபட்ட யானை டாப்சிலிப் அருகே உள்ள வரகளியார் வனப்பகுதியில் 6ஆம் தேதி விடப்பட்டது.

இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் தனிக்குழு அமைத்து அந்த மக்னா காட்டு யானையை கண்காணித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த யானை வனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.



இதனிடையே சேத்துமடை கிராமம் வழியாக நுழைந்த யானை, நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, மன்னூர் ராமநாதபுரம் பகுதியை கடந்து மதுக்கரை சாலையை கடந்து மோகன் நகருக்குள் வந்து முகாமிட்டுள்ளது.



இந்நிலையில், அந்த யானையை வனத்துறையினர் 8 குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது, அந்த யானை ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த யானை குனியமுத்தூர், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள டிரம்களில் தண்ணீர் பருகியும் மர கிளைகளை உடைத்தும் குடியிருப்பு பகுதியில் உலா வந்து கொண்டிருக்கிறன. தர்மபுரி பகுதியில் பயிரை மேய்ந்து பழக்கபட்டதனால் வனத்தினை விட்டு வெளியேறி விளை நிலங்களில் உலா வருகின்றது.



யானையால் இதுவரை மனித முரண் ஏற்படவில்லை. ஆனாலும் பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



யானை தற்போது வெயில் காரணமாக ஓய்வெடுத்து வருவதாகவும், யானையின் நடமாட்டத்தை வனத்துறை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...