மதுக்கரை அருகே முகாமிட்டுள்ள மக்னா யானை - 8 குழுக்கள் அமைத்து வனத்துறை தீவிர கண்காணிப்பு!

தருமபுரியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் மீண்டும் வெளியேறி, மதுக்கரை அருகே மோகன் நகரில் முகாமிட்டுள்ளது. அதனை வனத்துறை 8 குழுக்களை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே முகாமிட்டுள்ள மக்னா யானையை வனத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்கு புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

இந்நிலையில் சின்ன தம்பி என்ற கும்கி யானையை வைத்து வனக்குழுவினர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அந்த மக்னா யானையை பிடித்தனர். பிடிபட்ட யானை டாப்சிலிப் அருகே உள்ள வரகளியார் வனப்பகுதியில் 6ஆம் தேதி விடப்பட்டது.

இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் தனிக்குழு அமைத்து அந்த மக்னா காட்டு யானையை கண்காணித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த யானை வனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.



இதனிடையே சேத்துமடை கிராமம் வழியாக நுழைந்த யானை, நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, மன்னூர் ராமநாதபுரம் பகுதியை கடந்து மதுக்கரை சாலையை கடந்து மோகன் நகருக்குள் வந்து முகாமிட்டுள்ளது.



இந்நிலையில், அந்த யானையை வனத்துறையினர் 8 குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது, அந்த யானை ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த யானை குனியமுத்தூர், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள டிரம்களில் தண்ணீர் பருகியும் மர கிளைகளை உடைத்தும் குடியிருப்பு பகுதியில் உலா வந்து கொண்டிருக்கிறன. தர்மபுரி பகுதியில் பயிரை மேய்ந்து பழக்கபட்டதனால் வனத்தினை விட்டு வெளியேறி விளை நிலங்களில் உலா வருகின்றது.



யானையால் இதுவரை மனித முரண் ஏற்படவில்லை. ஆனாலும் பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



யானை தற்போது வெயில் காரணமாக ஓய்வெடுத்து வருவதாகவும், யானையின் நடமாட்டத்தை வனத்துறை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...