கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு- இரவிலும் தொடரும் போராட்டம்!

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரியும், உரிய காரணம் இன்றி மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை:மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்து கோவை சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் ஷேக் முகமது என்ற மாணவர் அவரது மனைவியான ஹாரிதா (இருவரும் கல்லூரி மாணவர்கள்) ஆகியோரின் டிசி தொடர்பாக கல்லூரி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் மிரட்டியதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருவரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

அதே சமயம் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணீஸ் என்ற மாணவரையும் உரிய காரணம் இன்றி இடைநீக்கம் செய்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் உரிய விளக்கம் அளிக்காமல் மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி வளாகம் முன்பு மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் இரவு நேரத்திலும் தொடர்ந்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உரிய காரணங்கள் இன்றி இடைநீக்கம் செய்த மாணவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தை காரணம் காட்டி மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேசமயம் மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும் விசாரணைக் குழுவில் மாணவர்கள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...