கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு- இரவிலும் தொடரும் போராட்டம்!

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரியும், உரிய காரணம் இன்றி மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை:மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்து கோவை சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் ஷேக் முகமது என்ற மாணவர் அவரது மனைவியான ஹாரிதா (இருவரும் கல்லூரி மாணவர்கள்) ஆகியோரின் டிசி தொடர்பாக கல்லூரி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் மிரட்டியதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருவரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

அதே சமயம் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணீஸ் என்ற மாணவரையும் உரிய காரணம் இன்றி இடைநீக்கம் செய்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் உரிய விளக்கம் அளிக்காமல் மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி வளாகம் முன்பு மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் இரவு நேரத்திலும் தொடர்ந்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உரிய காரணங்கள் இன்றி இடைநீக்கம் செய்த மாணவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தை காரணம் காட்டி மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேசமயம் மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும் விசாரணைக் குழுவில் மாணவர்கள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...