வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் வலம் வரும் காட்டு யானை - வாகன ஓட்டிகள் அச்சம்!

வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் விரிவாக்க பணியின் போது திடீரென வந்த ஒற்றை காட்டு யானையை கண்ட ஊழியர்கள் அச்சமடைந்து, அலறியடித்து ஓடி பாறைகள் மீது ஏறி பாதுகாப்பாக நின்றுள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே மழுக்கபாறை - அதிரப்பள்ளி சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

வால்பாறை அருகேயுள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை வாகனங்களை மறித்தும் சாலையில் நடந்தும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் கீழ் சோலையார் அணை பகுதியில் சாலை விரிவாக்க பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர்.



அப்பொழுது சாலையில் தீடீரென வந்த ஒற்றை காட்டு யானையை கண்ட ஊழியர்கள் அச்சத்தில் அருகில் இருந்த பாறைகள் மேல் ஏறி பாதுகாப்பாக நின்றனர். பின்னர் யானை பாலத்தை கடந்து சென்றது.

இந்நிலையில் தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

பெரிய கனரக வாகனங்களின் பின் இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...