வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் வலம் வரும் காட்டு யானை - வாகன ஓட்டிகள் அச்சம்!

வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் விரிவாக்க பணியின் போது திடீரென வந்த ஒற்றை காட்டு யானையை கண்ட ஊழியர்கள் அச்சமடைந்து, அலறியடித்து ஓடி பாறைகள் மீது ஏறி பாதுகாப்பாக நின்றுள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே மழுக்கபாறை - அதிரப்பள்ளி சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

வால்பாறை அருகேயுள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை வாகனங்களை மறித்தும் சாலையில் நடந்தும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் கீழ் சோலையார் அணை பகுதியில் சாலை விரிவாக்க பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர்.



அப்பொழுது சாலையில் தீடீரென வந்த ஒற்றை காட்டு யானையை கண்ட ஊழியர்கள் அச்சத்தில் அருகில் இருந்த பாறைகள் மேல் ஏறி பாதுகாப்பாக நின்றனர். பின்னர் யானை பாலத்தை கடந்து சென்றது.

இந்நிலையில் தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

பெரிய கனரக வாகனங்களின் பின் இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...