தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில காவல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

பந்தலூரில் நடந்த தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் மூன்று மாநில அதிகாரிகள் இணைந்து குற்றங்களை தடுக்க ஆலோசனைகளை வழங்குவது, மாவோயிஸ்ட் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தகவல் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தமிழ்நாடு - கேரளா - கர்நாடகா என 3 மாநில காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம் தமிழகம் - கேரளா - கர்நாடக ஆகிய 3 மாநிலங்கள் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இதனால் ஆண்டுதோறும் 3 மாநில காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஓர் இடத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் மூன்று மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்ட எஸ்.பி.பிரபாகரன் தலைமையில் பந்தலூரில் இன்று நடைபெற்றது.

இதில் மூன்று மாநில அதிகாரிகள் இணைந்து குற்றங்களை தடுக்க ஆலோசனைகளை வழங்குவது, மாவோயிஸ்ட் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தகவல் கொடுப்பது மூன்று மாநில காவல்துறை இணைந்து அதனை கட்டுப்படுத்துவது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளபட்டது.



இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட எஸ்.பி.பிரபாகர் பேசியதாவது:

தமிழகத்தில் முற்றிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை. கேரளாவில் ஒரு சில மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தற்போதும் உள்ளதால், அதையும் முற்றிலும் தடுப்பதற்காக மாநிலங்களுக்கு இடையே தகவல்கள் பரிமாற்றம் செய்து அவர்களின் நடமட்டம் தடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறைய தமிழக காவல்துறையின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில் தமிழக கர்நாடக எல்லை சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தபடும்.

மாவோயிஸ்டுகள் பழங்குடியினரை எளிதில் மூளைச்சலவை செய்து ஊடுருவ முயற்சி செய்வதை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அவர்களுக்கான அடிப்படை தேவைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டு அந்த முயற்சியும் தடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...