இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு விருது - பொள்ளாச்சி ரோட்டரி சங்கம் கவுரவிப்பு

பொள்ளாச்சி ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டது. விண்வெளி மற்றும் தொழில்நுட்பத் துறையில் நான்கு தலைமுறைகளாக முழுமையான பங்களிப்பை வழங்கி, முன்னுதாரணமான சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் ரோட்டரி சங்கத்தின் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் புகழ்பெற்ற விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவரும், தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புகழ்பெற்ற பேராசிரியருமான முனைவர் சிவனுக்கு, விண்வெளி மற்றும் தொழில்நுட்பத் துறையில் நான்கு தலைமுறைகளாக முழுமையான பங்களிப்பை வழங்கி, முன்னுதாரணமான சேவையை வழங்கி வருவதைப் பாராட்டி, கவுரவ(For the sake of honour 2022-2023 Award) விருது வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய முனைவர் சிவன், தம்முடைய விஞ்ஞானப் பயணம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும், தேசத்திற்குப் பங்களிக்கும் ரோட்டரி சங்கம் குறித்தும் உற்சாகம் மற்றும் எழுச்சியூட்டும் வகையில் உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய அவர், பொள்ளாச்சியில் உள்ள மாணவர்கள் குறிப்பாக விண்வெளி உள்கட்டமைப்புத் துறையில் தொழில்முனைவோராக மாற வேண்டும். விண்வெளி நடவடிக்கைகளுக்கு பொள்ளாச்சி ஒரு முக்கிய மையமாக எதிர்காலத்தில் உருவாக வேண்டும். இந்த கவுரவ விருதை இஸ்ரோவில் உள்ள குழுவினருக்கு அர்ப்பணிக்கிறேன். எனது சாதனைகள் அனைத்தும் எனது குழுவால் சாத்தியமானது.

இந்த நாட்டை உலகத்தின் முன்னணி நாடாக மாற்ற பல்வேறு துறைகளில் பிரதமர் எடுத்துள்ள முயற்சிகளால் இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கல்வி- ஸ்டார்ட் அப் -தொழில் ஆகியவற்றின் சூழலை துடிப்பானதாக மாற்றுவதற்கு இந்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இந்த சூழல் உண்மையில் தொழில்முனைவோருக்கு உகந்த ஒன்று.

எனவே, மாணவர்கள் வேலைவாய்ப்பை தேடிச்செல்பவர்களாக இருப்பதை விட தொழில்முனைவோராக மாற முயல வேண்டும். விண்வெளி உள்கட்டமைப்பு சந்தையில் கால் பதிக்க வேண்டும். ஏனெனில், இதில் நாட்டிற்கும் புதுமையான தீர்வு வழங்குபவர்களுக்கும் முன்னேற்றத்தை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல் நரசிம்மன், ரோட்டரியின் தொழில்சார் சேவை இயக்குனர் சி.எம். ஹரிராஜ், ரோட்டேரியன் ஜி.டி. கோபாலகிருஷ்ணன் தலைவர் பி.டி.எஸ் மகேஷ்வர், செயலாளர் எஸ்.லோகேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...