கிணத்துக்கடவு அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி - வனத்துறை விசாரணை!

கோவை கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் கிராமத்தில் இருந்து பணப்பட்டி செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது குறித்து வனத்துறை விவசாரணை நடத்திவருகிறது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் இருந்து பணப்பட்டி செல்லும் சாலையோரங்களில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் புள்ளிமான்கள் அதிகம் உள்ளது.



இந்த நிலையில் நேற்றிரவு சாலையில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியதில், அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.



இன்று காலை வழக்கம்போல் அவ்வழியாக சென்ற மக்கள், இறந்து கிடந்த புள்ளி மானைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் புள்ளிமான் இறப்பு குறித்து கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



புள்ளிமான் உண்மையிலேயே வாகனம் ஏதும் மோதி உயிரிழந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்கிற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...