கிணத்துக்கடவு அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி - வனத்துறை விசாரணை!

கோவை கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் கிராமத்தில் இருந்து பணப்பட்டி செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது குறித்து வனத்துறை விவசாரணை நடத்திவருகிறது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் இருந்து பணப்பட்டி செல்லும் சாலையோரங்களில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் புள்ளிமான்கள் அதிகம் உள்ளது.



இந்த நிலையில் நேற்றிரவு சாலையில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியதில், அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.



இன்று காலை வழக்கம்போல் அவ்வழியாக சென்ற மக்கள், இறந்து கிடந்த புள்ளி மானைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் புள்ளிமான் இறப்பு குறித்து கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



புள்ளிமான் உண்மையிலேயே வாகனம் ஏதும் மோதி உயிரிழந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்கிற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...