பொள்ளாச்சியில் சீமான் உருவபொம்மையை எரிக்க முயற்சி - தமிழ் புலிகள் கட்சியினர் கைது

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததிய மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சீமான் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் கைது.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த 13 ஆம் தேதி திருநகர் காலனியில் நடைபெற்றது.



அதில் பேசிய சீமான், அருந்ததியர் மக்களை இழிவு படுத்தி பேசியதாக கூறி, பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை கொண்டு வந்து எரிக்க முயன்றனர். அப்போது, அங்கிருந்த போலீசார் உருவபொம்மையை பிடிங்கி தடுத்து நிறுத்தினர்.



தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய தமிழ் புலிகள் கட்சியினர், சீமானை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து காவலர் மண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டம் காரணமாக கோவை-உடுமலை சாலை பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...