பொள்ளாச்சியில் சீமான் உருவபொம்மையை எரிக்க முயற்சி - தமிழ் புலிகள் கட்சியினர் கைது

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததிய மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சீமான் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் கைது.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த 13 ஆம் தேதி திருநகர் காலனியில் நடைபெற்றது.



அதில் பேசிய சீமான், அருந்ததியர் மக்களை இழிவு படுத்தி பேசியதாக கூறி, பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை கொண்டு வந்து எரிக்க முயன்றனர். அப்போது, அங்கிருந்த போலீசார் உருவபொம்மையை பிடிங்கி தடுத்து நிறுத்தினர்.



தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய தமிழ் புலிகள் கட்சியினர், சீமானை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து காவலர் மண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டம் காரணமாக கோவை-உடுமலை சாலை பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...