பொள்ளாச்சியில் சீமான் உருவபொம்மையை எரிக்க முயற்சி - தமிழ் புலிகள் கட்சியினர் கைது

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததிய மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சீமான் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் கைது.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த 13 ஆம் தேதி திருநகர் காலனியில் நடைபெற்றது.



அதில் பேசிய சீமான், அருந்ததியர் மக்களை இழிவு படுத்தி பேசியதாக கூறி, பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை கொண்டு வந்து எரிக்க முயன்றனர். அப்போது, அங்கிருந்த போலீசார் உருவபொம்மையை பிடிங்கி தடுத்து நிறுத்தினர்.



தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய தமிழ் புலிகள் கட்சியினர், சீமானை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து காவலர் மண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டம் காரணமாக கோவை-உடுமலை சாலை பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...