சைபர் குற்றவாளிகளிடம் உஷாராக இருக்க வேண்டும்..! - இளைஞர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

தமிழகத்தில் இளைஞர்கள் சைபர் குற்றவாளிகள் வலையில் சிக்குவதில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த கல்லூரி விழாவில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.



கோவை: பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் உள்ள சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் 25.வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, தமிழகத்தில் பத்தாயிரம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அடுத்த கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், உதவி ஆய்வாளர்கள் நியமிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, வரும் மார்ச் 1.ஆம் தேதி முதல் காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். 444 உதவி ஆய்வாளர்கள் நியமிக்க தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் 600 உதவி ஆய்வாளர்கள் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காவல்துறை பணிக்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர் அவர்கள் கேட்பதற்கு முன்பே காவல்துறையில் பணி அமர்த்தும் பணிகள் நடைபெறும் வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் இளமையாக காட்சியளிக்கும்.

குறிப்பாக, காவல் நிலையங்களுக்கு வரும் பொது மக்களின் புகார்களை பெற்று குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காணும் நடவடிக்கையாக 2300 பேர் காவல் நிலைய வரவேற்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் காவல்துறையினர் சேவை சிறப்பாக இருக்கும்.

செல்போன் பயன்பாட்டினால் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில் பலர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி விடுகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் தற்கொலை செய்ய நேரிடுகிறது. எனவே இளைஞர்கள் விழிப்புணர்வு இருக்க வேண்டும்., என்றார்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...