தாராபுரம் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்!

தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலம் அமராவதி ஆற்றில் முதலை உலா வருவதை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், ஆற்றில் முதலை உலா வருவதால் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அமராவதி ஆற்றங்கரையோரம் கட்டியிருந்த தனது மாட்டில் பால் கறக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று உலா வந்துள்ளது.

முதலையைப் பார்த்த அவர், பயத்தில் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகிலிருந்த மக்கள் வந்து பார்த்த போது முதலை இல்லை. இந்நிலையில் அவரை தொடர்ந்து ஆற்றங்கரைக்குச் சென்ற சிலர், முதலை நீரில் நீந்துவதைப் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனே காங்கேயம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் ஆற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள், முதலை உலா வருவதால், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.

இந்நிலையில் முதலையை உடனடியாக பிடிக்க கோரி கிராம மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...