தாராபுரம் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்!

தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலம் அமராவதி ஆற்றில் முதலை உலா வருவதை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், ஆற்றில் முதலை உலா வருவதால் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அமராவதி ஆற்றங்கரையோரம் கட்டியிருந்த தனது மாட்டில் பால் கறக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று உலா வந்துள்ளது.

முதலையைப் பார்த்த அவர், பயத்தில் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகிலிருந்த மக்கள் வந்து பார்த்த போது முதலை இல்லை. இந்நிலையில் அவரை தொடர்ந்து ஆற்றங்கரைக்குச் சென்ற சிலர், முதலை நீரில் நீந்துவதைப் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனே காங்கேயம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் ஆற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள், முதலை உலா வருவதால், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.

இந்நிலையில் முதலையை உடனடியாக பிடிக்க கோரி கிராம மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...