தாராபுரம் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்!

தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலம் அமராவதி ஆற்றில் முதலை உலா வருவதை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், ஆற்றில் முதலை உலா வருவதால் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அமராவதி ஆற்றங்கரையோரம் கட்டியிருந்த தனது மாட்டில் பால் கறக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று உலா வந்துள்ளது.

முதலையைப் பார்த்த அவர், பயத்தில் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகிலிருந்த மக்கள் வந்து பார்த்த போது முதலை இல்லை. இந்நிலையில் அவரை தொடர்ந்து ஆற்றங்கரைக்குச் சென்ற சிலர், முதலை நீரில் நீந்துவதைப் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனே காங்கேயம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் ஆற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள், முதலை உலா வருவதால், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.

இந்நிலையில் முதலையை உடனடியாக பிடிக்க கோரி கிராம மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...