பல்லடம் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை - செய்தியாளர்களை கண்டதும் தெறித்து ஓடிய நபர்!

பல்லடம் அருகே கணபதிபாளையம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கள ஆய்வுக்கு சென்ற செய்தியாளர்களை கண்டதும் லாட்டரி சீட்டு விற்பனையாளர் தெறித்து ஓடியதால் பரபரப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடப்பதும், ஒரு நோட்டில் சில லாட்டரி எண்களை எழுதி வைத்துக் கொண்டு செல்போன் மூலமாக தகவல் தெரிவிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்த போது கடந்த 14ஆம் தேதியன்று பல்லடம் அருகே கணபதிபாளையம் பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த முத்துலிங்கம் என்பவர் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிறையிலிருந்து வெளியில் வந்த முத்துலிங்கம், மீண்டும் லாட்டரி விற்பனை செய்வதாக வீடியோ வெளியானதையடுத்து, பத்திரிகையாளர்கள் அந்த பகுதியில் கள ஆய்விற்கு சென்றனர்.



அப்போது பத்திரிகையாளர்களை கண்டவுடன் அங்கு ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த முத்துலிங்கம், அவசர அவசரமாக வீட்டு கதவைப் பூட்டிவிட்டு செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட படியே தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வது போன்ற வீடியோக்கள் வெளியான பின்பும், அச்சம் இல்லாமல் சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ள முத்துலிங்கம் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...