திருப்பூர் உடுமலை அருகே மகன் நினைவாக அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய பெற்றோர்!

உடுமலை அருகேயுள்ள சின்னவீரன்பட்டியில் இறந்த மகனின் நினைவாக 10 லட்சம் ரூபாயை அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்காக வழங்கிய தாய் நாகரத்தினத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இறந்த மகன் நினைவாக அரசு பள்ளி மாணவர்கள் கல்விக்காக ரூ.10 லட்சம் நிதியாக வழங்கிய பெற்றோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



பல்லடம் அருகேயுள்ள பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர்கள் மோகன் குமார் - நாகரத்தினம் தம்பதி. இவர்களுக்கு விஷ்ணு பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார்.

இந்நிலையில் மகன் விஷ்ணு பிரசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஒரே மகன் இறந்த துக்கத்தில் இருந்த தந்தை மோகன் குமாரும் உடல் நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், மகன் இறந்த நிலையில் அவரது ஆயுள் காப்பீட்டில் இருந்து தாய் நாகரத்தினத்திற்கு ரூ.10 லட்சம் கிடைத்துள்ளது.



இந்த பணத்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்காக வழங்கியுள்ளார்.

இதற்கான உயில் ஒன்றையும் பள்ளியின் பெயரில் எழுதி வைத்துள்ளார். அதில், தனது மகனின் காப்பீட்டு தொகையான 10 லட்சம் ரூபாய் வங்கியில் செலுத்தப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டி தொகை ஆண்டுதோறும், மகனின் பிறந்த நாளான ஜூன் 1ஆம் தேதி பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்படும்.

இதனையடுத்து தமது காலத்துக்கு பிறகு அந்த தொகையானது முழுமையான பள்ளியின் புரவலர் நிதியில் சேர்க்கப்படும் என உயில் எழுதி வைத்துள்ளார்.



இந்த உயிலை முறையாக பதிவு செய்து அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்பக்கனியிடம் ஒப்படைத்தார். அப்போது அவருடன் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் சோமசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...