உடுமலை அருகே திருமூர்த்திமலையில் சிவராத்திரி விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை கோவிலில் சிவராத்திரியையொட்டி நேற்றிரவு முதல் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலை கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலையில், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகள் ஒருங்கே அமைந்துள்ள வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அங்கு மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, இரவு 8 மணி அளவில், முதல் கால பூஜைகளும், இரவு 10 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும் சிறப்பு அபிஷேகமும், தீபாரதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

குறிப்பாக மங்கள இசை, பாட்டும் பரதமும், தேவராட்டம் கிராமிய நாட்டுப் புறக்கலை நிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் விடிய, விடிய நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும், அதிகாலை 4 மணி அளவில் நான்காம் கால பூஜைகளும் நடைபெற்றது.



இதை தொடர்ந்து 5 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீப தரிசனம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு உடுமலையில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பி்ல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.



இந்த நிகழ்வுக்கு உடுமலை, பொள்ளாச்சி, பழனி, மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனையொட்டி, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.



மேலும், கோவில் நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தினர்.

இதனிடையே மகாசிவராத்திரியை முன்னிட்டு உடுமலை நகரில் உள்ள மாரியம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில், போடிபட்டி முருகன் கோவில் சின்ன விநாயகர் கோவில் மற்றும் தில்லை நகர் ரத்ன லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...