பீட்ரூட்டுக்கு நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - உடுமலை விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை அருகே சீதோஷ்ண நிலை மற்றும் இடைத்தர்கள் காரணமாக பீட்ரூட் விலை குறைந்துள்ள நிலையில், தோட்டக்கலைத்துறை சார்பில் நிலையான விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பீட்ரூட்க்கு நிலையான விலை கிடைக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.



உடுமலை மற்றும் குடிமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கிணற்று பாசனத்தில் பீட்ரூட் பயிரிடப்படுகிறது. பொங்கல் பண்டிகை சீசனில், கிலோ, 30 ரூபாய் வரை பீட்ரூட் கொள்முதல் செய்யப்பட்டது.



ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால், விலை வேகமாக சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக, விலை கிலோ, 10 ரூபாய்க்கும் குறைவாக விலை போகிறது.

சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு, காய்கறிகளின் நுகர்வு குறைந்து, வரத்து அதிகரித்துள்ளதே விலை சரிவிற்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்சமயம் சீதோஷ்ண நிலை காரணமாகவும், இடைத்தரகர்கள் ஆதிக்கம் காரணமாகவும், பீட்ரூட் விலை கடுமையாக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...