தாராபுரத்தில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

தனியார் பள்ளி மற்றும் காவல்துறை இணைந்து தாராபுரத்தில் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது குறித்து தனியார் பள்ளி மாணவர்கள், விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

தாராபுரம் அருகே மடத்துக்குளம் - ஓட்டமடம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சார்பில் குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



தாராபுரம் காவல் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

மேலும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



தாராபுரம் பூக்கடை வீதியில் இருந்து துவங்கிய இந்த பேரணியை தனியார் பள்ளியின் பயிற்சி உதவி ஆய்வாளர் தமிழ்ராஜ் கொடியை அசைத்து துவங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.

இந்த பேரணியானது, வசந்தாரோடு, சி.எஸ்.ஐ வளாகம், நகராட்சி மேல்நிலைப்பள்ளி சாலை, வழியாக பொள்ளாச்சி அமராவதி ரவுண்டானாவில் நிறைவடைந்தது. இதனிடையே அமராவதி ரவுண்டானா பகுதியில் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகள் மற்றும் விதை பந்துகள் வழங்கினர்.

மேலும், அவர்களிடம் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...