கோவை வேளாண் பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடிய டிஜிபி சைலேந்திரபாபு!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.



கோவை: கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.



கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் அறிஞர் அண்ணா நிர்வாக வளாகத்தில் மாணவர் நல மையம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விஷயங்களையும், ஊக்கமூட்டும் கருத்துக்களையும் டிஜிபி சைலேந்திரபாபு பகிர்ந்து கொண்டார்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் அவர்களது கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அவை அனைத்திற்கும் சைலேந்திரபாபு பதிலளித்தார். கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது மாணவர்கள் அவருடன் புகைபடங்கள் எடுத்து கொண்டனர்.

அப்போது பாதுகாவலர்கள் மாணவர்களை தடுத்த போதிலும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு, அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்ட பின்னரே புறப்பட்டார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...