கோவை வேளாண் பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடிய டிஜிபி சைலேந்திரபாபு!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.



கோவை: கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.



கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் அறிஞர் அண்ணா நிர்வாக வளாகத்தில் மாணவர் நல மையம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விஷயங்களையும், ஊக்கமூட்டும் கருத்துக்களையும் டிஜிபி சைலேந்திரபாபு பகிர்ந்து கொண்டார்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் அவர்களது கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அவை அனைத்திற்கும் சைலேந்திரபாபு பதிலளித்தார். கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது மாணவர்கள் அவருடன் புகைபடங்கள் எடுத்து கொண்டனர்.

அப்போது பாதுகாவலர்கள் மாணவர்களை தடுத்த போதிலும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு, அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்ட பின்னரே புறப்பட்டார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...