மேட்டுப்பாளையத்தில் சிறுதானிய உணவுக் கண்காட்சி - ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவ-மாணவியர்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் நடந்த சிறுதானிய உணவு கண்காட்சியில் சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, மற்றும் தானிய பயிர் வகைகள் குறித்து பல்வேறு உணவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி சார்பில் சிறுதானிய உணவுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவுகள் பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.



இந்த கண்காட்சியில், நாகரீக வாழ்க்கையில் நாம் மறந்து போன நமது பழமையான உணவு பழக்க வழக்க முறைகளாக இருந்துவந்த சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, மற்றும் தானிய பயிர் வகைகள் குறித்து பல்வேறு உணவுப்பொருட்கள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருத்தது.



கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த கண்காட்சியில், சுமார் 25 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 30க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் மற்றும் நமது பாரம்பரிய நாட்டு மருந்து என்ற அடிப்படையில் உள்ள பிரண்டை, ஆவாரம்பூ, தூதுவேளை, நெல்லிக்கனி உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.



இந்த கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர். முன்னதாக, இந்த கண்காட்சியினை ஆச்சி மசாலா கல்வி குழும நிர்வாக அதிகாரி ஸ்டான்லி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரூபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...