கோவை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் - ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌, வளர்ச்சி திட்டப்பணிகள்‌ மற்றும்‌ வெள்ளலூர் குப்பை கிடங்கில்‌ மேற்கொள்ளப்பட்டுவரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தார்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வாடு எண்‌.85-க்குட்பட்ட வெங்கடாசலபதி நகரில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌, மட்கும்‌ குப்பை மற்றும்‌ மட்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டதை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, குப்பைகளை மட்கும்‌ குப்பை, மட்காத குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளரார்களை அறிவுறுத்தினார்.



அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.85-க்குட்பட்ட சில்வர்‌ ஜுப்லி வீதியில்‌ ரூ.18.70 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 320 மீட்டர் தொலைவிற்கு சிமெண்ட்‌ கான்கிரீட்‌ தளம்‌ மற்றும்‌ 250 மீட்டர் தொலைவிற்கு மழைநீர்‌ வடிகால்‌ கட்டும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதையும் அவர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

பின்னர், கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கில்‌ மட்கும்‌ குப்பைகள்‌, மட்காத குப்பைகள்‌ தரம்‌ பிரிக்கப்பட்டு, உரம்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதையும்‌, வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கு பகுதியில்‌ மரக்கன்றுகள்‌ பராமரிக்கும்‌ இடத்தினையும்‌, குப்பை கழிவுகளை தரம்‌ பிரித்து பயோ மைனிங்‌ இயந்திரம்‌ மூலம்‌ உரம்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.9க்குட்பட்ட செட்டிபாளையம்‌ சாலை, போத்தனூர்‌ பகுதியில்‌ நடைபெற்றுவரும்‌ சாலைப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார். பின்பு, குறிச்சி, குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக போத்தனூர்‌ நெடுஞ்சாலையில்‌ ரூ.442 கோடி மதிப்பீட்டில்‌ பாதாள சாக்கடை பணிகள்‌ நடைபெற்றுவருவதையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மாமன்ற உறுப்பினா்‌ சரளா, நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர்‌ ஆறுமுகம்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய செயற்பொறியாளர்‌ எம்‌.மதியழகன்‌, உதவி ஆணையர்‌ (பொ) மாணிக்கம்‌, உதவி செயற்பொறியாளர்‌ கே.கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள்‌ சரண்யா, சபரிராஜ்‌, ரவிக்கண்ணன்‌, சபரீசன்‌, சதீஷ்‌, மண்டல சுகாதார அலுவலா்‌ ஆண்டியப்பன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...