தாராபுரம் அருகே அலங்கியம் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

அலங்கியம் நெடுஞ்சாலையில் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் வேகத்தடை அமைத்துத் தரக்கோரி விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 30-க்கும் மேற்பட்டடோர் கோட்ட பொறியாளர் ராணியிடம் மனு.


திருப்பூர்: தாராபுரம் நெடுஞ்சாலையில் இரு இடங்களில் வேகத்தடை அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோட்ட பொறியாளர் ராணியை சந்தித்து வேகத்தடை அமைத்துத் தரக்கோரி மனு கொடுத்தனர்.



அந்த மனுவில், அலங்கியம் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலையில், உள்ள காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நியாயவிலைக்கடை, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் நியாயவிலைக்கடை பகுதியில் வேகத்தடை அமைத்துக் கொடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.



மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்ட பொறியாளர் ராணி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...