தாராபுரம் அருகே அலங்கியம் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

அலங்கியம் நெடுஞ்சாலையில் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் வேகத்தடை அமைத்துத் தரக்கோரி விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 30-க்கும் மேற்பட்டடோர் கோட்ட பொறியாளர் ராணியிடம் மனு.


திருப்பூர்: தாராபுரம் நெடுஞ்சாலையில் இரு இடங்களில் வேகத்தடை அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோட்ட பொறியாளர் ராணியை சந்தித்து வேகத்தடை அமைத்துத் தரக்கோரி மனு கொடுத்தனர்.



அந்த மனுவில், அலங்கியம் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலையில், உள்ள காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நியாயவிலைக்கடை, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் நியாயவிலைக்கடை பகுதியில் வேகத்தடை அமைத்துக் கொடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.



மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்ட பொறியாளர் ராணி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...