பொள்ளாச்சி பல்லடம் சாலையில் மதுபான கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - சார் ஆட்சியரிடம் மனு

பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் அமையவுள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மதுபான கூடம் அமைய உள்ளதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் LIC காலனி, குமரன் வீதி, மாரியம்மாள் லே - அவுட் குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதிகளவில் குடியிருப்புகளும் உள்ளது. எனவே மதுபான கடை அமைந்தால், மாண-மாணவிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

இதைக் கருத்தில் கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் இந்த பகுதியில் மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும், எதிர்ப்பை மீறி மதுபானக்கூடும் தொடங்கினால் போராட்டங்கள் நடத்தப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...