பொள்ளாச்சி பல்லடம் சாலையில் மதுபான கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - சார் ஆட்சியரிடம் மனு

பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் அமையவுள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மதுபான கூடம் அமைய உள்ளதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் LIC காலனி, குமரன் வீதி, மாரியம்மாள் லே - அவுட் குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதிகளவில் குடியிருப்புகளும் உள்ளது. எனவே மதுபான கடை அமைந்தால், மாண-மாணவிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

இதைக் கருத்தில் கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் இந்த பகுதியில் மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும், எதிர்ப்பை மீறி மதுபானக்கூடும் தொடங்கினால் போராட்டங்கள் நடத்தப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...