தாராபுரம் கோயில் திருவிழாவில் வள்ளிகும்மி ஆட்டம் - கண்டு ரசித்த பொதுமக்கள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சின்ன காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள சின்ன காளியம்மன் கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆண்டுத் திருவிழாவையொட்டி, அமராவதி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து கரகாட்டத்துடன் பக்தர்கள் தீர்த்த குடத்தை தென்தாரை சின்ன காளியம்மன் கோயில் வளாகத்திற்கு கொண்டு வந்தனர். கோயில் முன்பு வைத்து பூமாலை சூடினார்.



பின்னர் பூஜைகள் செய்யப்பட்டன.



இதைத்தொடர்ந்து. கோவை கலை வள்ளிகும்மி ஆட்ட கலைஞர்களின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வள்ளி கும்மியாட்டக் கலைஞர்கள் முருகப்பெருமான், வள்ளி தெய்வானை மற்றும் காளியம்மனுக்கு பாடல்கள் பாடி வள்ளி கும்மியாட்டத்திற்கே உரித்தான பாணியில் உடல் அசைத்து கைகள் தட்டி பாட்டு பாடி கும்மி அடித்தனர்.



இதனை, சின்ன காளியம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுரசித்தனர்.



அழிந்து வரும் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, திருப்பூர் மாவட்டம் பகுதியில் பல்வேறு கோயில் திருவிழாக்களில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி தற்போது தொடர்ந்து நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...