கோவை தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு - கொத்தாக சிக்கிய கல்லூரி மாணவர்கள்!

கோவையில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 250க்கும் மேற்பட்டோர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனர். தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களில் அதிகம் பேர் கல்லூரி மாணவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாநகரில் நடக்கும் பல விபத்துக்களில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற பலரும் உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்கும் வகையில், தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பரப்புரைகளை கோவை மாநகர காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது.

மேலும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருவோர் மீது, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி வழக்குப்பதிவு செய்து, அபராதமும் விதிக்கப்படுகிறது. கடந்த ஏழாம் தேதியன்று, பொள்ளாச்சி சாலையில், தலைக்கவசம் அணியாமல் வந்த பலருக்கும் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதில் சிலர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் அதிகப்படியான கல்லுாரி மாணவர்கள் செல்வது தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இதைத் தடுக்கும் வகையில், உயிர் சாலை பாதுகாப்பு அமைப்பினர் போலீசாருடன் இணைந்து, கல்லுாரிகளின் முன்பாக விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர். ரத்தினம் கல்லூரி, எல்.ஐ.சி., காலனி, நேரு மற்றும் கிருஷ்ணா கல்லூரிகள் முன்பாக, போலீசார் வாகன சோதனையும் மேற்கொண்டனர்.

காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் நான்கு இடங்களிலும் சேர்த்து, 250க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், கல்லூரி மாணவர்கள் தான் அதிகளவில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதியோர், பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,கள் செல்வகுமார், ரங்கதுரை, அர்த்தநாரி, எஸ்.எஸ்.ஐ. அருள்துரை, ஏட்டுகள் இளங்கோ, கற்பூரசுந்தரபாண்டியன், ராஜா ஆகியோருடன் அந்தந்த கல்லூரி மாணவர்களும் இந்த விழிப்புணர்வு பரப்புரையில் பங்கேற்றனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...