கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை கருத்தரங்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்

கோவயில் நடைபெற்று வரும் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 'ஐஆக்ட்ஸ்க்கான் 2023' (IACTSCON) கருத்தரங்கத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் கருத்தரங்கத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் வருடாந்திர கருத்தரங்கு "ஐஆக்ட்ஸ்க்கான் 2023" (IACTSCON) கோவையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.என்.ஆர். அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் கலந்து கொண்டார்.



இந்திய மருத்துவ கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 1,200க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதய அறுவை சிகிச்சையில் உள்ள புதுமைகளை எடுத்துரைக்கவும், இதய அறுவை சிகிச்சை குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் இந்த கருத்தரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கருத்தரங்கின் முக்கிய உரையை உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வழங்கினார்.

'பெருந்தொற்றை நாம் கையாண்டதும், அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களும்' என்ற தலைப்பில் அவர் பேசினார்.

இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர் மெஹர்வால் மற்றும் அதன் செயலர் டாக்டர் ஹிரேமத் தலைமை தாங்கினர்.

இந்த கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்த கடந்த ஆறு மாதங்களாக உழைத்து வந்த ஒருங்கிணைப்பு குழுவுக்கு கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தியாகராஜமூர்த்தி தனது நன்றிகளை தெரிவித்தார். குறிப்பாக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டாக்டர் முரளிதரன் மற்றும் பொருளாளர் டாக்டர் விஜய் ஆகியோரின் பங்களிப்பிற்கு நன்றிகளை தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...