கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை கருத்தரங்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்

கோவயில் நடைபெற்று வரும் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 'ஐஆக்ட்ஸ்க்கான் 2023' (IACTSCON) கருத்தரங்கத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் கருத்தரங்கத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் வருடாந்திர கருத்தரங்கு "ஐஆக்ட்ஸ்க்கான் 2023" (IACTSCON) கோவையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.என்.ஆர். அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் கலந்து கொண்டார்.



இந்திய மருத்துவ கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 1,200க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதய அறுவை சிகிச்சையில் உள்ள புதுமைகளை எடுத்துரைக்கவும், இதய அறுவை சிகிச்சை குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் இந்த கருத்தரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கருத்தரங்கின் முக்கிய உரையை உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வழங்கினார்.

'பெருந்தொற்றை நாம் கையாண்டதும், அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களும்' என்ற தலைப்பில் அவர் பேசினார்.

இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர் மெஹர்வால் மற்றும் அதன் செயலர் டாக்டர் ஹிரேமத் தலைமை தாங்கினர்.

இந்த கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்த கடந்த ஆறு மாதங்களாக உழைத்து வந்த ஒருங்கிணைப்பு குழுவுக்கு கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தியாகராஜமூர்த்தி தனது நன்றிகளை தெரிவித்தார். குறிப்பாக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டாக்டர் முரளிதரன் மற்றும் பொருளாளர் டாக்டர் விஜய் ஆகியோரின் பங்களிப்பிற்கு நன்றிகளை தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...