கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை கருத்தரங்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்

கோவயில் நடைபெற்று வரும் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 'ஐஆக்ட்ஸ்க்கான் 2023' (IACTSCON) கருத்தரங்கத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் கருத்தரங்கத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் வருடாந்திர கருத்தரங்கு "ஐஆக்ட்ஸ்க்கான் 2023" (IACTSCON) கோவையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.என்.ஆர். அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் கலந்து கொண்டார்.



இந்திய மருத்துவ கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 1,200க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதய அறுவை சிகிச்சையில் உள்ள புதுமைகளை எடுத்துரைக்கவும், இதய அறுவை சிகிச்சை குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் இந்த கருத்தரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கருத்தரங்கின் முக்கிய உரையை உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வழங்கினார்.

'பெருந்தொற்றை நாம் கையாண்டதும், அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களும்' என்ற தலைப்பில் அவர் பேசினார்.

இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர் மெஹர்வால் மற்றும் அதன் செயலர் டாக்டர் ஹிரேமத் தலைமை தாங்கினர்.

இந்த கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்த கடந்த ஆறு மாதங்களாக உழைத்து வந்த ஒருங்கிணைப்பு குழுவுக்கு கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தியாகராஜமூர்த்தி தனது நன்றிகளை தெரிவித்தார். குறிப்பாக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டாக்டர் முரளிதரன் மற்றும் பொருளாளர் டாக்டர் விஜய் ஆகியோரின் பங்களிப்பிற்கு நன்றிகளை தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...