வால்பாறை அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்

வால்பாறை அருகேயுள்ள தாய்முடி எஸ்டேட் என்.சி பிரிவில் குடியிருந்து வரும் பழனிசாமி என்பவர், இன்று தேயிலை தோட்டத்தில் வேலை செய்து விட்டு, வீட்டிற்குத் திரும்பும் போது, காட்டெருமை அவரை தாக்கியதில் தலை மற்றும் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது.


கோவை: வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளியை காட்டெருமை தாக்கியதில் காயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் என் சி பிரிவில் குடியிருந்து வருபவர் பழனிசாமி(54).

இவர் இன்று தேயிலைத் தோட்டத்தில் வேலை முடித்து விட்டு, வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக வந்த காட்டெருமைகள், பழனிசாமியை தாக்கியுள்ளது. இதில் அவருக்கு தலை மற்றும் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது.



அருகிலிருந்த சக தொழிலாளர்கள் பழனிசாமியை மீட்டு எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.



பின்னர் மேல்சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...