கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவம் - ஊட்டி காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் சரண்!

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகே கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைதான நிலையில், கோவை காந்திபுரத்தை சேர்ந்த ஞானசேகர் என்பவர் ஊட்டி பி-1 காவல் நிலையத்தில் சரணடைந்தார்.



கோவை: கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ள நிலையில், வழக்கு விசாரணைக்காக கோவைநீதிமன்றத்திற்கு வந்தனர்.



அவர்கள் இருவரும் நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரம் 2 ஆவது வீதியில் தேனீர் அருந்த சென்றபோது பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் தேனீர் கடை முன்பாக இருவரையும் கத்தியால் சரமாறி வெட்டிவிட்டு தப்பி சென்றது.

அதில், கழுத்தில் பலத்த வெட்டுக்காயத்துடன் இருந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கபட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

அப்போது, அந்தக் கும்பலை சேர்ந்த ஒருவரின் செல்போன் சிக்னல் நீலகிரியில் பதிவான நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் தீவர வாகன சோதனை மேற்கொள்ளபட்டது. அதில், கோத்தகிரியிலிருந்து மேட்டுபாளையம் நோக்கி 3 இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை வழிமறித்தபோது நிறுத்தாமல் சென்றனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தபோது, கோவை கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி என்பது தெரியவந்தது. மேலும் 2- பேர் கட்டபெட்டு பகுதியில் ஒரு பைக்கில் சென்றபோது பிடிபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு, 4 பைக்குகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



இவர்கள் அனைவரும் கோவைக்கு அழைத்துசெல்லப்பட்டபோது, 2 பேர் மேட்டுப்பாளையம் அருகே தப்பி ஓட முயன்றபோது, அவர்களின் கால்களில் சுட்டு போலீசார் பிடித்தது குறிப்பிடத்தக்து. இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 8-வது நபர் கோவை காந்திபுரத்தை சேர்ந்த ஞானசேகர் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில், உதகை B1 காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அந்த நபரைகாவல்துறையினர் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...