கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவம் - ஊட்டி காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் சரண்!

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகே கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைதான நிலையில், கோவை காந்திபுரத்தை சேர்ந்த ஞானசேகர் என்பவர் ஊட்டி பி-1 காவல் நிலையத்தில் சரணடைந்தார்.



கோவை: கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ள நிலையில், வழக்கு விசாரணைக்காக கோவைநீதிமன்றத்திற்கு வந்தனர்.



அவர்கள் இருவரும் நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரம் 2 ஆவது வீதியில் தேனீர் அருந்த சென்றபோது பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் தேனீர் கடை முன்பாக இருவரையும் கத்தியால் சரமாறி வெட்டிவிட்டு தப்பி சென்றது.

அதில், கழுத்தில் பலத்த வெட்டுக்காயத்துடன் இருந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கபட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

அப்போது, அந்தக் கும்பலை சேர்ந்த ஒருவரின் செல்போன் சிக்னல் நீலகிரியில் பதிவான நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் தீவர வாகன சோதனை மேற்கொள்ளபட்டது. அதில், கோத்தகிரியிலிருந்து மேட்டுபாளையம் நோக்கி 3 இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை வழிமறித்தபோது நிறுத்தாமல் சென்றனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தபோது, கோவை கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி என்பது தெரியவந்தது. மேலும் 2- பேர் கட்டபெட்டு பகுதியில் ஒரு பைக்கில் சென்றபோது பிடிபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு, 4 பைக்குகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



இவர்கள் அனைவரும் கோவைக்கு அழைத்துசெல்லப்பட்டபோது, 2 பேர் மேட்டுப்பாளையம் அருகே தப்பி ஓட முயன்றபோது, அவர்களின் கால்களில் சுட்டு போலீசார் பிடித்தது குறிப்பிடத்தக்து. இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 8-வது நபர் கோவை காந்திபுரத்தை சேர்ந்த ஞானசேகர் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில், உதகை B1 காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அந்த நபரைகாவல்துறையினர் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...