கோவை அருகே காரமடையில் ரூ.2.67 கோடியில் புதிய தடுப்பணை - அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார் எம்.பி., ஆ.ராசா!

கோவை மாவட்டம் காரமடை மேற்கு பகுதியில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சேமிக்கும் வகையில் ரூ.2.67 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டுமான பணியை தொடக்கி வைத்த எம்பி ஆ.ராசா, இந்த திட்டம் முழுமை பெறும்போது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டம் காரமடையின் மேற்கு பகுதிகளான தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தாயனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை, தென்னை, கரும்பு, காய்கறிகள், சிறுதானியங்களை விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த பகுதியில் மலைத்தொடர்கள் உள்ள நிலையிலும், கோடை காலங்களில் பெரிய அளவில் வறட்சி ஏற்படுவதாலும் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் இருந்துவருகிறது. எனவே, மழைக்காலங்களில் மலைத்தொடரில் இருந்து வரும் மழை நீரினை தடுத்து, அதன் மூலம் ஆழ்குழாய் கிணறு, பாசன கிணறுகளுக்கு தண்ணீர் மேம்படுத்தும் விதமாக தடுப்பணை கட்டித்தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.



இதனையடுத்து, பெரிய பள்ளம் பகுதியில் சுமார் 2 கோடியே 67லட்சம் மதிப்பில் 2மீட்டர் உயரம் 26 மீட்டர் நீளத்தில் புதிய தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.



இதில், நீலகிரி தொகுதி எம்.பியும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு தடுப்பணை கட்டும் இடங்களை பார்வையிட்டு, கட்டுமான பணிகளை துவங்குவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் முழுமை பெறும்போது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என ஆ.ராசா தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...