கோவையில் காதலிப்பதாகக் கூறி பள்ளி மாணவி கடத்தல் - போக்சோ வழக்கில் தனியார் பேருந்து நடத்துநர் கைது!

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி கடத்தியதாக, பல்லடத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சபரிநாதன் என்பவர் போக்சோ வழக்கில் துடியலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடியிருந்து வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் அந்தப் பெண் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த வாரம் பள்ளிக்கு சென்ற மாணவி, வீடுதிரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், துடியலூர் காவல் நிலையத்தில் தாய் அனு புகார் தெரிவித்தார். அந்தப் புகாரில், தனது மகள், பேருந்து நடத்துநர் ஒருவருடன் சென்று இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து இருந்தார்.



அதைத்தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், பல்லடத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவரை கைது செய்து சிறுமியை மீட்டனர். கடந்த ஒருமாதமாக காதலிப்பதாக கூறி சபரிநாதன், சிறுமியை கடத்தி சென்றதும், தனியார் பேருந்தில் அவர் நடத்துநராக வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற சபரிநாதன் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைதான சபரிநாதனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...